Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வேற லெவலில் மாறப்போகும் மணிமுத்தாறு அணை…. முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை உள்ளது. அணைக்கு அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அருவியும் உள்ளது. இந்த அணை கட்டும் போதே அதன் அருகில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள், காட்சி கோபுரம், ஓய்வுக்கூடம் போன்ற அம்சங்களுடன் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூங்கா முறையான பராமரிப்பில்லாததால் அங்குள்ள சிலைகளை உடைந்தும், புதர் மண்டி, கால்நடைகளின் மேச்சல் நிலமாகவும், சமூக விரோதிகளில் கூடாரமாகவும் மாறுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த மாத நெல்லை வந்த தமிழக முதல்வர் அணையில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தளமாக மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

ஏற்கனவே பூங்கா இருந்த இடத்திலே பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த பல்லுயிர் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பல்லுயிர் பூங்கா அமைய இருக்கும் இடத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு பூங்காவின் வரைபடத்தை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களும் பேசிய அவர், பல்லுயிர் பூங்காவுடன் சேர்ந்து மாணவர்களுக்கான அறிவியல் பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து பொழுதுபோக்கு வசதிகளுடன் இந்த பூங்கா அமைய உள்ளது. இதனையடுத்து மணிமுத்தாறு பூங்காவை நெல்லை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மழை காலம் முடிந்தவுடன் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |