Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. செல்லப்பிராணிகளுக்கு கோலாகலமாக நடைபெற்ற திருமணம்…. இணையத்தில் வைரல் வீடியோ….!!!!

அரியானாவில் குரு கிராம நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் மணிதா மற்றும் சவிதா என்பவர் வசித்து வருகிறார்கள். மணிதா செல்ல பிராணியாக ஷெரு என்று பெயரிடப்பட்ட ஆண் நாயை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் சவிதா என்ற ராணி. இவர் செல்லப் பிராணியாக ஸ்வீட்டி என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி 100 பேருக்கு அழைப்பை விடுத்துள்ளனர். திருமண பத்திரிகைகளுக்கான 25 அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளனர். மற்றவர்களை ஆன்லைன் மூலம் அழைத்துள்ளனர்.

இது பற்றி சவிதா கூறியது, நான் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பிரியம் உள்ளவள். எனது கணவரும் நானும் செல்ல பிராணிகளை பராமரித்து வருகிறோம். எனக்கு குழந்தைகள் இல்லை அதனால் ஸ்வீட்டியை நாங்கள் குழந்தையாக வளர்த்து வருகிறோம்க். ஸ்வீட்டிக்கு திருமணம் செய்து வைக்கலாமே என்று பலரும் கூறுவார்கள். அது பற்றி நாங்களும் யோசித்தோம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த திருமணத்தின் போது பாரம்பரிய முறைப்படி நாய்களுக்கு மாலை அணிவித்து, சடங்குகள் நடத்தப்பட்டது. மேலும் கொட்டு மேளங்களும் முழங்கியது‌. திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நடனமாடி மகிழ்ந்தனர். அந்த இடமே கோலாகலமாக காணப்பட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |