Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. கோவை TO கேரளா… சைக்கிள் சென்று தாலி கட்டிய மாப்பிள்ளை… திகைக்க வைக்கும் பின்னணி….!!!!

கோவை மாவட்டத்தில் சிவசூர்யா(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து ஆரோக்கியமான இந்தியயா,‌ பசுமை இந்தியா குறித்து மக்களிடையே அவ்வப்போது இவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவருக்கு கேரளா மாநிலம் கண்ணுரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்தை நேற்று கேரளா மாநிலம் குருவாயூர் கோவில் நடத்த முடிவு செய்தனர்.  இந்நிலையில் சிவசூர்யா தனது திருமணத்திற்கு கார், வேன் என வாகனத்தில் செல்லாமல் சைக்கிள் செல்ல முடிவு செய்தார்.

அதன்படி சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து சைக்கிளில் தனது நண்பர்களுடன் புறப்பட்டார். கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து சனிக்கிழமை மாலை சென்றடைந்தார்.‌ நேற்று காலை குருவாயூர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் சிவசூர்யா அஞ்சனா திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து உடல் ஆரோக்கியத்தில் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக மணமகன் சிவசூர்யா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |