குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயான் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10 வது ஆண்டு பட்டளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தொழிலாளர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், இந்திய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்னேபோதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு மாற்றங்களை காணும், பெரிய வளர்ச்சியை எட்டும். அதனை தொடர்ந்து 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்டிருக்கும்.
இந்தியா 2047 ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு அதிகரித்து 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியை அடையும். பொருளாதாரத்தில் உலகில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா இடம்பெறும். இதனையடுத்து பயோ-எனர்ஜி புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி புரட்சி ஆகிய மூன்று வருங்காலங்களில் இந்தியாவின் அசுர வளர்ச்சியின் முக்கிய பங்கு வகிக்கும். இந்த மூன்று புரட்சிகளும் சேர்ந்து நம்முடைய அழகான பூமியை காலநிலை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற உதவும். மேலும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா மேலோங்கி இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.