புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2 நாட்கள் நடைபெறும் ‘விவசாயிகள் சம்மேளனம் 2022’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது”ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களையும் வழங்கும் நிறுவனங்கள் ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் மண் உரங்கள் – யூரியா, டி-அம்மோனியம் பாஸ்பேட், மியூரேட் ஆப் பொட்டாஷ் மற்றும் என்பிகே போன்றவை அனைத்தும் நாடு முழுவதும் ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும்.
அதனை தொடர்ந்து பிரதான் மந்திரி விவசாயிகள் நிதி திட்டத்தின் 12 வது பாகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். அத்துடன் 600 விவசாய சம்ருத்தி கேந்திராக்களையும் திறந்து வைத்தார். இது ஒரே இடத்தில் விவசாயத் துறை குறித்த பல சேவைகளை பெறக்கூடிய இடமாக விளங்கும். இதனையடுத்து நாட்டில் உள்ள 3.3 லட்சத்திற்கும் அதிகமான உர சில்லறை விற்பனை கடைகளை பிரதமர் விவசாய சம்ருத்தி எதிராக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் உரங்கள் பற்றிய டிஜிட்டல் வடிவ இதழான ‘இந்தியன் எட்ஜ’ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்.