Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை…. முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திரு.ரங்கசாமி முதல்வராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இவர் சமீபத்தில் புதுவை வளர்ச்சிக்கு ரூ.2000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதன்படி ஒன்றிய அரசு ரூ.1,400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து 100 ஏக்கரில் மருத்துவ பூங்கா தொடங்குவது, தொழில்நுட்பம் பூங்காவில் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்கபடும் என்று தெரித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் புதுவையில் 10,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 2000 பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து பட்ஜெட்டில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது நிறைவேற்றப்படும் என்றும அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக 16,000 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அதன் பிறகு விண்ணப்பத்தாருக்கு உதவி தொகை வழங்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |