Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி ரயிலில் செல்போனுக்கு வேலை இல்லை…. வெளியான மாஸ் திட்டம்….!!!!

ரயில் பயணம் என்றாலே ரம்மியமானது. அதிலும் தொலைதூரம் ரயில் பயணங்கள் என்றால் பலருக்கும் கொள்ளை பிரியம்.‌ ஆனால் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாமல் நீண்ட தூரம் பயணிப்பது பலருக்கும் சலிப்பு தட்டிவிடும். சமீப காலமாக பலரும் செல்போன்களை பார்த்துக் கொண்டே ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த சூழலை மாற்றி அமைக்க கூடிய வகையில் மதுரை ரயில்வே புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக வாசிக்கும் அனுபவத்தை அளிக்க பிரபல வார, மாத இதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதுரையில் இருந்து புறப்பட்ட மதுரை-பீகானீர் வாராந்திர விரைவு ரயிலில் இன்று இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த ரயிலில் பரிசோதனை அடிப்படையில் உள்ள பயணிகளுக்கு 3 தமிழ், 2 ஆங்கிலம், 5 பிற மொழி இதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை மதுரை முதுநிலைக் கோட்ட ரயில் இயக்கம் மேலாளர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி, அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்து மற்ற வகுப்புகளுக்கும் மற்றும் ரயில்களுக்கும் புத்தக வாசிப்பு அனுபவம் விரிவுப்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |