மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மாநகர பாஜக சார்பில் எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். 2.20 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராமுக்கு செல்கிறார். அங்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இந்தி திணைப்பு நடைபெறுவதாக கூறிய அமைச்சர் பொன்முடி சுய பரிசோதனை செய்ய வேண்டும். கடந்த 2019 ஆம் ஆண்டு வரை இந்தி 3 வது மொழியாக தான் இருந்தது. இந்திய மொழி திணிக்க கூடாது என்பது பிரதமரின் விருப்பம். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவின் புதிய கல்விக் கொள்கை மாற்றுப் பெயர்களில் ‘இல்லம் தேடி கல்வி’ என்று பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர் தான் தமிழில் பயின்று வருகின்றனர். கோவை கொண்டு வெடிப்பு சம்பவத்தில் 24ஆம் தேதி நான் மனித வெடிகுண்டு தாக்குதல் என்றேன், வெடிகுண்டு வெடித்து 54 மணி நேரம் கழித்து தான் பயங்கரவாத தாக்குதல் என்று கூறுகிறார்கள்.
இதனையடுத்து ஆர்.எஸ். பாரதிராஜா பாஜகவிற்கு நன்றி சொல்ல வேண்டும், பாஜக தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மறைத்தது திமுக தான். பாஜக வெளிப்படுத்த விட்டால் சிலிண்டர் குண்டு வெடிப்பில் இறந்த முபின் குடும்பத்திற்கு அரசு வேலையே திமுக அரசு கொடுத்திருக்கும். மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடைபெற்ற சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. பள்ளி குழந்தைகள் பீர் பாட்டில்களை எடுத்துச் செல்லும் நிலை நான் உள்ளது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழகம் மதுபாலும், கஞ்சாவாலும் சீரழிந்ததுள்ளது. காவல்துறையின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் கையில் உள்ள லத்தி என்பது பூஜை செய்வதற்கா?. காவல் நிலையத்தில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துக்களை தடுக்க வேண்டும். காவல்துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் கஞ்சா குடிப்பவர்கள், பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும். சாத்தான் குளம் தூத்துக்குடி போன்ற காவல்துறையினரை நிகழ்வுகள் தவறு, மேலதிகாரிகளின் தோல்விதான் அது. மேலும் திருப்புகழ் ஐஏஎஸ் மோடியின் அன்பை பெற்றவர். மோடியிடம் பாடம் கற்றவர். அவரது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளனர். அதனால் சிறப்பாக பணியாற்றுவார். தமிழக அமைச்சர்கள் குறுக்கும் நெடுக்கம் நடந்து உழப்பாமல் இருந்தால் சரி தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.