சிம்ரன் வெளியிட்ட காயங்களுடன் கூடிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியுள்ளது
பல வெற்றி படங்களை கொடுத்த சிம்ரன் 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து திரையுலகை விட்டு விலகியே இருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாகவும் பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து பழைய சிம்ரனை காட்டி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் சிம்ரன். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் சிம்ரன் காயப்பட்டு விட்டதாக எண்ணி ஆறுதல் கூறி வந்தனர். பிறகு அந்த புகைப்படம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என தெரிந்ததும் தான் ரசிகர்கள் சற்று அமைதிகொண்டனர்.