தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை சுருதிஹாசனுக்கு தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் வனவிலங்கு பாதுகாப்பு தூதுவராக நியமிக்கப் பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு WWF (World wildlife fund for nature) என்ற சர்வதேச தொண்டு அமைப்பானது தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது.
இந்த அமைப்பு தற்போது 29 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கொள்கை வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக கூண்டில் அடைத்தல் மற்றும் சர்க்கஸ் போன்ற செயல்களில் ஈடுபடுத்தாமல் அவற்றை சுதந்திரமாக வனவிலங்குகளில் விட வேண்டும் என்பதுதான். இந்த அமைப்பின் இந்திய தூதராக தற்போது நடிகை சுருதிஹாசன் நியமிக்கப் பட்டுள்ளார். எனவே நிறுவனத்தின் பணிகளை நடிகை ஸ்ருதிஹாசன் இனி இந்தியாவில் மேற்கொள்வார். மேலும் இந்த நிறுவனம் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, காலநிலை மாற்றம் போன்றவற்றிற்கு ஏற்றார் போன்ற செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.