பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவை கைது செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ராதிகா ஆப்தே தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ள நிலையில் ஆபாசமாக நடிக்கும் நடிகை ராதிகா ஆப்தே மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவை ராஜ் குந்த்ராவைப் போலவே கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.