சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதன்படி பத்து தல, இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது கைவசம் நிறைய திரைப்படங்கள் இருந்தாலும் இவர் பயங்கர கடுப்பில் இருக்கிறாராம்.
ஏனெனில், பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆயினும் இவருக்கு சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதாம். மேலும், இவர் தனுஷ், கார்த்தி அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த போதிலும் இவருடைய சம்பளத்தை எந்த தயாரிப்பாளரும் ஏற்ற முன் வரவில்லை.
இவர் சம்பளத்தை அதிகமாக கேட்டால் தயாரிப்பாளர்கள் வேறு ஹீரோயினை தேடி சென்று விடுகிறார்களாம். இந்நிலையில், இவர் இனிமேல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் மட்டுமே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தான் தன்னுடைய சம்பளத்தையும் அதிகப்படுத்த முடியும் என முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.