நடிகர் அனில் முரளி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அனில் முரளி (56).. அதுமட்டுமன்றி தமிழில் தனி ஒருவன், நிமிர்ந்து நில், மிஸ்டர் லோக்கல் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையில் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொச்சியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். நடிகர் அனில் முரளியின் இந்த மரணமானது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள இவருக்கு சுமா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.