தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் 37 பேர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேனி முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சுபாஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தற்போது புதுகோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.