Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!… பால் விலை உயர்த்த திடீர் முடிவு‌?….. ஷாக்கான நுகர்வோர்கள்….!!!!

கேரளாவில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த குழு பால்விலையை உயர்த்துவது குறித்து தமது பரிந்துரை அறிக்கை அரசிடம் அளித்துள்ளதாம்.

இந்த அறிக்கை அடிப்படையில் தொழிற்சங்கம் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தான் பால் விலையை லிட்டருக்கு எவ்வளவு உயர்த்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. பால் விலை லிட்டருக்கு‌ரூ.7 முதல் ரூ.8 வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்தில் அரசு துறை நிறுவனமான மில்மா மூலம் நுகர்வோருக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அங்கே தற்போது ஒரு லிட்டர் பால் ரூ.46 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |