எகிப்தில் ஓட்டுனர் உரிமம் பெறாத இளைஞர் இயக்கிச்சென்ற ரிக்சா, நீர் பாசன கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
எகிப்தில் இருக்கும் தலைநகர் கெய்ரோவிலிருந்து பெஹைரா என்ற மாகாணத்தின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் ஒரு ரிக்சா சென்றிருக்கிறது. அப்போது நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர் பாசன கால்வாயில் சென்று கொண்டிருந்த ரிக்சா திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் இருந்த 12 பேரில் குழந்தைகள் 8 பேரும் பரிதாபமாக பலியாகினர். அந்த ரிக்சாவின் ஓட்டுனரான 19 வயது இளைஞர் சரியாக பராமரிக்கப்படாத ரிக்சாவை இயக்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரிடம் ஓட்டுனர் உரிமமும் இல்லை. எனவே அந்த இளைஞர் மீது மனித படுகொலைக்கான குற்றச்சாட்டுகளின் பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.