Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்….. அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. சென்னையில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து 6 வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹாலன் என்பவர் வகித்து வருகிறார். இந்நிலையில் ஹாலன் காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்லாவரம் அரைவா சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம், ஆட்டோ, சரக்கு வாகனம் என ஆறு வாகனங்களின் மீது அடுத்தடுத்து பலமாக மோதி நின்று விட்டது.

இந்த விபத்தில் ஹாலன் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர்.

Categories

Tech |