Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

நிலைதடுமாறிய வாகனம்… மின்கம்பத்தால் வாலிபருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சண்முகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவருடைய மகன் சந்துரு என்பவர் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி சென்றுள்ளார். அந்த சமயத்தில் நிலைதடுமாறிய வாகனம் எதிரே உள்ள மின்கம்பத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |