Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… காவலாளிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தனியார் பேருந்து ஒன்று சைக்கிள் மீது மோதியதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்தார். ஜெயக்குமார் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரகடம் வாலாஜாபாத் பகுதியில் தனது வேலையை முடித்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயகுமார் சைக்கிளின் பின் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதி விட்டது.

இதில் மோசமாக காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரகடம் காவல்துறையினர் ஜெயக்குமாரின் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஒரகடம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |