சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் ரங்கநாதபுரம் பகுதியில் நளினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, இவரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.