Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த சம்பவம்… முதியவருக்கு நேர்ந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

சைக்கிளின் மீது மொபட் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லி டிரங்க் சாலையில் தனது சைக்கிளில் பார்வையற்றோர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, பூந்தமல்லியில் வசித்து வரும் சத்யபிரியா என்பவர் ஓட்டி வந்த மொபட் இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிவலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதோடு படுகாயமடைந்த சத்யபிரியாவிற்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |