அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையன்குடி பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திகேயன். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் இளையான்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.