சரக்கு ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள தரகம்பட்டி பகுதியில் காளியப்பன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று காளியப்பன் தனது மனைவி மாலதியுடன் இருசக்கர வாகனத்தில் தரகம்பட்டி சென்று கொண்டிருந்தார். பசுபதிபாளையம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ திடிரென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காளியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் காளியப்பன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.