இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கால்நடை மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள எஸ்டேட் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கங்களாஞ்சேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் அவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கங்களாஞ்சேரி ரயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜீவானந்தம் சென்ற இருசக்கர வாகனமும் மனோகரன் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஆனால் மனோகரனுக்கு காயம் ஏற்படாததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீவானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.