பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாகத் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கிலிருந்து கூகுள் நிறுவன தலைமைச் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டடுள்ளது.
உள்ளூரை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோவிற்கும், சுந்தர் பிச்சை உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.இதை தொடர்ந்து அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையிலிருந்து அவர்களது பெயர்களைக் காவல்துறை நீக்கியுள்ளது.