முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
1. முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றுவதற்கு சிறந்த வழியாகும், ஆவி பிடிப்பது. ஆவி பிடித்து முடிந்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் பொழுது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
2. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 5 முதல் 10 நிமிடம் வரை ஆவி பிடித்து, பின் முகத்தை துணியால் துடைத்தாள் மூக்கில் காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
3. ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள பருக்கள் குறையும். முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்சின்களால் ஏற்படும் பருக்கள் துணியால் துடைக்கும் போது போய்விடும்.
4. முதுமை தோற்றத்தை தடுக்கும்.எவ்வாறென்றால் சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது நாம் ஆவி பிடித்தால் அந்த அழுக்குகளை நீக்கி முகத்தை பளிச்சென்றும் , இளமை தோற்றத்தையும் தரும்.
5. பருக்கள் முகத்தில் இருக்கும்பொழுது 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின்னர் 30 நிமிடம் ரிலக்ஸ் ஆக இருந்து ஐஸ் கட்டிகளால், முகத்தில் தேய்த்தால், பருக்கள் உடைந்து விடும். இதனால் ஒரே நாளில் பருக்கள் இல்லாமல் குறைத்துவிடலாம்.
6.ஆவி பிடிக்கும் போது முகத்தில் சரியான ரத்த ஓட்டம் இருக்கும். மேலும் முகத்தில் உள்ள துளைகள் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் நன்கு சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
இருக்கின்ற நேரத்தில் ஆவி பிடித்து சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன்,அழகாக மாற்றுங்கள்.