மத்திய அரசின் வேளாண் சட்டதிட்டங்களை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டதிட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் மத்திய அரசின் சட்ட திட்டங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் உறுப்பினரான கணேசன் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் கட்சியின் துணை உறுப்பினர்களான ரங்கசாமி, வெள்ளையங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து முக்கிய விருந்தினராக சி.ஐ.டி.யு மாவட்ட குழு உறுப்பினரான ஆர்.ரங்கசாமி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல் கடம்பூர், அந்தியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.