பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முதலமைச்சர் பழனிசாமி வரவேற்றுள்ளார்.
பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சொத்து உரிமையின் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார். இதுபற்றி முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சொத்துரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் சமூகநீதியை காப்பாற்றும் வகையில் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.
சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 11, 2020