Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என் மனைவி திட்டி விட்டால்” கணவன் எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி திட்டியதால் கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் மேற்குத் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் தனது மாமியார் வீட்டில் வசித்து வருகின்ற மனைவியையும், ஒரு வயது மகளையும் பார்ப்பதற்காக குடிபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரேவதி கணவரை கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதர் தனது வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |