காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டியிருந்த ஹோட்டலை அகற்றி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி காலனியில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று உள்ளது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஹோட்டலை அகற்றியுள்ளனர்.