Categories
உலக செய்திகள்

‘எல்லாரும் நல்ல காரியம் பண்ணீருக்காங்க’…. விரைவில் திறக்கப்படவுள்ள 34 மருத்துவமனைகள்….!!

நிதி உதவிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டுக்கு அளித்து வந்த நிதி உதவியை உலக நாடுகளும் பல்வேறு அமைப்புகளும் நிறுத்தின. குறிப்பாக நிதி உதவி நிறுத்தப்பட்டதால் அங்கு செயல்பட்டு வந்த 34 கொரோனா மருத்துவமனைகளும் மூடப்பட்டன. இதனால் கொரோனா தொற்று பரிசோதனை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாமல் போனது.

மேலும் இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து  சுகாதார அமைப்பே சீர்குலைந்து காணப்பட்டது. இதற்கிடையில் உலக நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நிதி உதவியை மீண்டும் அளிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் விரைவில் மருத்துவமனைகள் மீண்டும்  திறக்கப்படும் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |