ஆப்கானில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பைசாபாத் நகரிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. இது குறித்த தகவலை தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.