Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 23 பவுன் நகை… அதிர்ச்சியடைந்த பால் வியாபாரி… 3 பேரை தேடி வரும் போலீசார்…!!

திருவாரூர் மாவட்டத்தில் பால் வியாபாரியிடம் இருந்து மர்ம நபர்கள் 23 பவுன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாடர்ன் நகரில் நெடுமாறன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் வழக்கம்போல நெடுமாறன் பால் கொள்முதல் செய்வதற்காக அவருடைய மொபட்டில் மன்னார்குடியில் இருந்து மதுக்கூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சுந்தரக்கோட்டை அருகில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 3 மர்ம நபர்கள் நெடுமாறனை வழிமறித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்த தைல மர தோப்பிற்கு கத்தியை காட்டி மிரட்டி அழைத்து சென்று அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 23 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து நெடுமாறன் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பரவாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |