Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் சென்ற கப்பல்…. இந்திய ஊழியருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு…. ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ஓமான் அரசு….!!

நடுக்கடலில் சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்த இந்திய ஊழியருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஓமன் அரசு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஓமன் நாட்டில் சலாலா பகுதியில் ஜாக் லோகேஷ் சென்ற இந்திய சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்த இந்திய ஊழியர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த கப்பலின் கேப்டன் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் துறைமுக கட்டுப்பாட்டு ஆணையம் இந்திய ஊழியரை மீட்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஓமன் விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கப்பல் சென்று கொண்டிருந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்து விமானப்படை வீரர் ஒருவர் கயிற்றின் மூலம் கப்பலுக்குள் இறங்கி அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய கப்பல் ஊழியரை பெல்ட் மூலம் தன்னுடன் பிணைத்துக் கொண்டு அதே கயிற்றில் ஏறி ஹெலிகாப்டரில் சென்றார். அதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் சலாலாவில் உள்ள சுல்தான் காபூஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓமன் அரசின் இந்த செயலுக்கு இந்திய தூதரகத்தின் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |