Categories
உலக செய்திகள்

விடுதலை பண்ணீட்டாங்க….. சொந்த நாட்டிற்கு திரும்பிய கைதி…. அதிரடி நடவடிக்கையில் அமெரிக்க நிர்வாகம்….!!

குவாண்டனமோ சிறையில் இருந்த கைதி விடுவிக்கப்பட்டு அவரது சொந்த நாட்டிற்கே ஜோ பைடன் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

அல்-காய்தா இயக்கத்தை சேர்ந்த அப்துல்லத்தீஃப் நாசா் என்பவர் கடந்த 2002 ஆப்கானில் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக  சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள குவாண்டனமோ வளைகுடாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிறைக்குள் இருக்கும்போது தனது கடந்த கால நடவடிக்கைகளை எண்ணி மிகவும் வருந்துவதாகவும் சமூகத்துடன் இணைந்து வாழ விரும்புவதாகவும் கூறியதை அடுத்து அவரை விடுதலை செய்ய மறுஆய்வு குழு அதிகாரிகள் பரிந்துரை செய்தது.

ஆனால் அப்போது ஆட்சியிலிருந்த ஒபாமா நிர்வாகத்தில் இவரை விடுதலை செய்வதற்கான நடைமுறை எதுவும் செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வந்த ட்ரம்ப் ஆட்சிக்காலத்திலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் அப்துல்லத்தீஃப் நாசா் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது உள்ள ஜோ பைடன் நிர்வாகம் அப்துல்லத்தீஃப் நாசா் விடுதலை செய்து அவருடைய சொந்த நாடான ஆப்கானுக்கு திரும்ப அனுப்பி வைத்துள்ளது. மேலும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் முதல் கைதி இவரே ஆவார்.

Categories

Tech |