Categories
உலக செய்திகள்

“எங்க ஊரு சூப்பர் ஹீரோ”…. புயலாவது புண்ணாக்காவது…. மக்கள் சேவையே மகேசன் சேவை…. மாஸ் காட்டும் தபால்காரர்….!!!!

அமெரிக்காவில் தபால்காரர் ஒருவர் புயலே வந்தாலும் பரவாயில்லை தனக்கு கடமை தான் முக்கியம் என்று பொதுமக்களுக்கு சேவை செய்து “சூப்பர் ஹீரோவாக” மாறி வருகிறார்.

அமெரிக்காவின் கென்டகி மாகாணம் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீட்பு பணிகள் கூட முழுமையடையாத நிலையில் அங்குள்ள பொதுமக்களுக்கு தபால்காரர் ஒருவர் தொடர்ந்து சேவையாற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது கோடி ஸ்மித் என்றழைக்கப்படும் அந்த தபால்காரர் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதனையும் பொருட்படுத்தாமல் மேஃபீல்டு என்ற பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தபாலினை வழங்கி வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல் இவ்வாறு சேதமடைந்த நிலையில் இந்த நகரத்தை பார்க்கும் போது மனதிற்கு வேதனையாக இருப்பதாகவும் கோடி ஸ்மித் கூறியுள்ளார். இந்த மோசமான சூழ்நிலையிலும் அவருடைய கடமையை சிறப்பாக செய்து வருவதால் அங்குள்ள மக்கள் அந்த தபால்காரரை “சூப்பர் ஹீரோ” என்று அழைக்கின்றனர்.

Categories

Tech |