வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆவின் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது 2 மர்ம நபர்கள் அவரை கத்தியை காட்டி வழி மறித்துள்ளனர். பின்னர் முருகனை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முருகன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அன்பு நகரைச் சேர்ந்த வேல்முருகன், பாண்டியராஜன் ஆகிய இருவரும் முருகனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.