மணமக்கள் PPE Kit என்னும் மருத்துவ பாதுகாப்பு உடை அணிந்து திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ரட்லம் நகரில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திடீரென்று மணமகனுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனால் திருமணம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்பதில் அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த திருமணத்தை முதலில் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வந்துள்ளனர். ஆனால் மூத்த அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் வழிகாட்டுதலின்படி இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.
அது எப்படியென்றால் இந்த திருமணத்தில் இரண்டு உறவினர்கள், புரோகிதர், மணப்பெண், மாப்பிள்ளை என 5 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் 5 பேரும் பாதுகாப்பான முறையில் PPE Kit என்னும் மருத்துவ பாதுகாப்பு உடை அணிந்து கொண்டனர். எந்த பெருந்தொற்றும் 2 மனங்களை பிரிக்க முடியாது என்பதை எடுத்துக் காட்டாக இந்த திருமணம் நிரூபித்துள்ளது. இந்த திருமண விழாவில் எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் மணமக்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.