கடன் தொல்லையால் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் சரிவர இல்லாததால் அவர் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் நடத்தியுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் ரமேஷ் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.