Categories
தேசிய செய்திகள்

மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேத்த பணம்…. கொரோனா நோயாளிகளை காப்பாற்ற எடுத்த முடிவு…. ஆக்சிஜனுக்காக நன்கொடைக்கு வழங்கிய விவசாயி….!!

விவசாயி தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் நாடு முழுவதும் பல நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளும் ஆக்சிஜனும் கிடைக்காமல் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் அல்லாடும் நிலையை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நீமுச் மாவட்டத்தில் விவசாயி குர்ஜால் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ரூபாய் 2 லட்சத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ளார். தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக பலரும் போற்றும் படி செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார். ஆனால் கொரோனா காரணமாக அவரது மகளின் திருமணம் கடந்த வாரம் எளிமையாக நடைபெற்றுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளின் உயிர்களை காக்க முடிவெடுத்துள்ளார்.

அதன்படி தான் சேர்த்து வைத்திருந்த ரூபாய் இரண்டு லட்சம் பணத்தை உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்காக நன்கொடையாக வழங்க முடிவெடுத்துள்ளார். அதேபோல் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மயங்க் அகர்வாலிடம் வழங்கினார். இந்த பணத்தில் தனது தாலுகா மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு தலா ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் விவசாயின் நன்கொடையை மாவட்ட கலெக்டர் மற்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்

Categories

Tech |