குழந்தையை கடத்த முயற்சித்த நபர்களிடம் இருந்து சிறுமியின் தாய் தைரியமாகப் போராடி தடுத்து நிறுத்திய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த 2 பேர்’சேல்ஸ்மேன்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் தாகம் எடுக்கிறது குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.. அப்போது, அந்தப் பெண் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பின், வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரின் 4 வயது குழந்தையைக் கடத்த முயற்சி செய்தனர்.. இதையடுத்து, குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெண், துணிச்சலுடன் கடத்தல்காரர்களின் பைக்கை கீழே தள்ளிவிட்டு, போராடி தன்னுடைய குழந்தையையை அவர்களிடமிருந்து மீட்டார்..

#WATCH: Mother of a 4-yr-old girl saves her daughter from kidnappers in #Shakarpur area of #Delhi on July 21. Two persons including uncle of the child were arrested. (ANI) pic.twitter.com/N0XDxPpoGW
— TOI Delhi (@TOIDelhi) July 22, 2020