Categories
உலக செய்திகள்

நதிக்கரையில் மேற்கொண்ட ஓட்டப்பயிற்சி…. திடீரென்று கேட்ட சத்தம்…. நிஜத்தில் ஹீரோவாக மாறிய மனிதர்….!!

நீருக்குள் மூழ்கி கொண்டிருந்த சிறுவனை தம்பதியினர் சரியான நேரத்தில் மீட்டதால் அவருக்கு விருதும் பழக்கமும் வழங்க மருத்துவ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் தென் சாஸ்கச்சேவான் நதிக்கரையில் Brad மற்றும் அவருடைய மனைவி Ashley ஆகிய இருவரும் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் திடீரென்று சிறுவன் ஒருவன் உதவி கோரி கத்திக்கொண்டிருந்ததை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 8 வயது சிறுவன் ஒருவன் நீருக்குள் மூழ்கி வெளியே வரமுடியாமல் போராடுவதை அவரும் அவரது மனைவியும் பார்த்துள்ளனர்.

அவனை காப்பாற்ற கோரி கரையில் இருந்த மற்றொரு சிறுவன் கத்திக்கொண்டிருந்ததையும் அவர்கள் கண்டுள்ளனர். உடனடியாக Brad அந்த சிறுவனிடம் தன் கை கால்களை அடித்தும் நீந்த முயற்சிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுவன் தன்னால் நீந்த முடியவில்லை என கூறியிருக்கிறான். உடனே பிராட் எதையும் யோசிக்காமல் நீருக்குள் குதித்து அந்த சிறுவனை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

அதன்பின் அவசர உதவிக்குழுவினர் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது அந்த சிறுவன் நலமாக இருக்கிறான். Brad அந்த சிறுவனை சரியான நேரத்தில் காப்பாற்றி இருக்காவிட்டால் அங்கு ஒரு துயர சம்பவம் ஏற்பட்டிருக்கும் எனக் கூறியுள்ள மருத்துவக் உதவிக்குழுவினர் Bradக்கு வீரப்பதக்கம் மற்றும் விருது ஒன்றையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் Bradஐ ஒரு ஹீரோ எனக் கூறி அவருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Categories

Tech |