Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ….? புதிய தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகைக்காக நடப்பாண்டில் ரூ. -1000 வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு பொங்கல் பரிசு பணத்தை கைகளில் கொடுப்பதற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது கூட்டுறவு துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, தமிழகத்தில் 2 கோடியை 34 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் 14 லட்சத்து 86 ஆயிரம் பேர் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கிறார்கள். இதில் 95 சதவீதம் பேருக்கு இணைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள நபர்களுக்கும் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை இணைப்பு என்பது கட்டாயம் கிடையாது. மேலும் இணைக்காவிட்டாலும் கூட ரேஷன் கடைகளில் வழக்கம் போல் பொருள்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |