பெல்ஜியத்தில் ஒரு ராணுவ வீரர் பயங்கரமான ஆயுதங்களுடன் காணாமல் போனதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெல்ஜியத்தில் ராணுவ வீரர் ஒருவர், தொற்று நோயியல் நிபுணராகவுள்ள Marc Van Ranst என்பவரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் அவர் இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நீதித்துறை அமைச்சர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, அந்த நபர் ராணுவ முகாமிலிருந்து சக்தி வாய்ந்த ஆயுதங்களை திருடி வந்திருக்கலாம். அது மிகவும் ஆபத்தானது. எனவே அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தொற்று நோயியல் நிபுணர் Marc Van Ranst கூறுகையில், இந்த மிரட்டலால் நான் பயப்படப்போவதில்லை, கொரோனா விதிமுறைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் கும்பல் தான் இதனை செய்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். எனினும் அவர் குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிகாரிகள் அந்த நபர், ஆயுதங்களை கொண்டு என்ன செய்யப்போகிறாரோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.