திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வடகரை, முருகன்குடி, வெண்பாவூர், பாடாலூர், சின்னாறு அன்னமங்கலம், உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் தான் அதிகளவு வாழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில், மான், மயில் உள்ளிட்டவை உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்துவிடுவது சகஜம்.. இதனிடையே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் இன்று காலை சாலையை கடந்து செல்ல முயன்ற 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஓன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தது.
இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் புள்ளிமானின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.