Categories
தேசிய செய்திகள்

ரூ 6,000 பில் கொடுக்க முடியாது… மருத்துவமனையில் பணயக் கைதியாக அமர வைக்கப்பட்ட சிறுமி..!!

உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்ததற்குப் பணம் கொடுக்காத காரணத்தால் 17 வயது சிறுமியை பணயக் கைதியாக அமர வைத்துள்ளனர்.

டெல்லி உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி  காரணமாகச் சென்றுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.. பின்னர், அவரிடம் 6,000 ரூபாய் கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்து போன அந்த சிறுமி, தனக்கு 4 மணி நேரம் மட்டுமே சிகிச்சை அளித்ததாகவும், இதற்கு இவ்வளவு தொகை கொடுக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

இதனால், சிறுமியை மருத்துவமனை அலுவலர்கள் பெட்டிலேயே பணயக் கைதியாக அமர வைத்துள்ளனர். இதையடுத்து, அந்தச் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து, ‘தன்னை மருத்துவமனையில் பணயக் கைதியாக அமர வைத்துள்ளதாகவும், தனக்கு உதவி செய்யுங்கள்’ என்று வீடியோ  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பின்னர், இதனையறிந்து மருத்துவமனைக்கு வந்த வழக்கறிஞர் அசோக் அகர்வால் என்பவர் சிறுமியை அங்கிருந்து வெளியேற்றுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து, ரூ 1000 மட்டும் மருத்துவமனையில் செலுத்திய பின்னர், இரவு அந்தச் சிறுமி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Categories

Tech |