16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 16 வயது சிறுமியை 22 வயதுடைய வாலிபர் காதலித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இந்த தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 16 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சிறுமியின் தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதன் பின்னர் மருத்துவமனையில் 16 வயதுடைய சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து மருத்துவ நிர்வாகத்தினர் குழந்தை பெற்ற பெண்ணின் வயதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த 16 வயதுடைய சிறுமி தன்னை கட்டாயத் திருமணம் செய்து கொண்டதாக அந்த வாலிபர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.