தெற்கு டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்த சிறுமியை அதே மையத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது.. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதகாரணத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தசம்பவம் குறித்துப் பேசிய தெற்கு டெல்லியைச் சேர்ந்த கூடுதல் துணை ஆணையர், இது பற்றி விசாரித்து வருவதாகவும், குற்றவாளி கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்த பின் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்..