விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
திருப்பத்தூரில் உள்ள கதவாளம் பகுதியில் இருக்கின்ற நிலத்தில் பயிர் அறுவடை நடைபெற்றுள்ளது. அந்நேரம் நிலத்தில் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு கிடந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகில் இருக்கும் வனப்பகுதியில் விட்டனர்.