Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கியது எச்.டி.எஃப்.சி குழுமம்..!

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் COVID19 தொற்றுநோயை நோக்கிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காகவும், இந்திய அரசை ஆதரிப்பதற்காகவும் PMCares நிதிக்கு ரூ .150 கோடியை எச்.டி.எஃப்.சி குழுமம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது. இதில் டாடா நிறுவனம் ரூ.1000 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி, பாபா ராமதேவ் ரூ.25 கோடி என வழங்கியுள்ளனர். விளையாட்டு வீரர்களான சச்சின், ரோஹித் சர்மா உள்ளிட்டோரும் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.

மேலும், நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தங்களது பங்களிப்பாக தலா ரூ.50,000 வழங்கியுள்ளனர். இதனிடையே, PMCARES நிதி வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்றுக்கொண்ட செய்தி குறித்து ஏராளமான தவறான தகவல்கள் பரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. PM CARES நிதி வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளை வெறுமனே ஏற்றுக் கொள்ளும் என அரசாங்க வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

Categories

Tech |